tamilnadu

img

பஞ்சமி நிலங்களை மீட்டெடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

கோவை, நவ. 22. பஞ்சமி நிலங்களை தனியாரிடமிருந்து மீட்க வலியுறுத்தி சமூக நீதிக்கட்சியின் சார்பில் வெள்ளியன்று கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தமிழகம் முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்களிடமிருந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் பஞ்சமி நிலங்கள் தனியாரால் ஏமாற்றப்பட்டு பறிக்கப்பட்டுள்ளது. இதனால் தனது சொந்த நிலத்திலேயே தலித் மக்கள் கூலிக்கு வேலை செய்யும் அவலம் கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களில் ஏற்பட்டுது. இந்நிலையில், பஞ்சமி நிலங்களை தனியாரிடம் இருந்து மீட்டெடுக்க வலியுறுத்தி கோவை யில் சமூக நீதிக்கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு துணை பொதுச் செயலாளர் சபாபதி தலைமை தாங்கினார். அக்கட்சியின் தலைவர் பன்னீர் செல்வம் சிறப்புரையாற்றினார். இதில் அமைப்பின் நிர்வாகிகள் வெள்ளமடை நாகராசன், நாகேந்திரன், ரோசன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.