தூத்துக்குடி, ஜூலை 31- கொரோனா பரிசோத னையை வட்டார அளவில் அதிகப்படுத்தவும், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பிற நோ யாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் உள்ளிட் டவை வலியுறுத்தி உடன்குடி அரசு மருத்துவமனை முன்பு மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் செல்வி, நிர்வாகிகள் இசக்கியம்மன், அனிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருச்செந்தூரில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் சந்திரா தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் கலைச்செல்வி, நிர்வாகிகள் மல்லிகா, பாப்பா தேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சூரங்குடியில் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு கிளை நிர்வாகி கள் மீனா முனீஸ்வரி உள் ளிட்டோர் கலந்து கொண்ட னர்.