tamilnadu

img

காஞ்சிபுரத்தில் பெரியார் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்

தாராபுரம், ஜன. 24 - காஞ்சிபுரத்தில் பெரியார் சிலையை சேதப்படுத்தியவர் கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. காஞ்சிபுரத்தில் தந்தை பெரியார் சிலையை மர்ம நபர் கள் சேதப்படுத்தியதைக் கண்டித்து திக, திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் சார்பில் தாராபுரம் அண்ணா சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட் டத்திற்கு திராவிடர் கழக மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமை வகித்தார். திமுக நகர செயலாளர் கே.எஸ்.தன சேகர், வழக்கறிஞர் அணி நிர்வாகி செல்வராஜ், படிப் பகம் ராஜாமணி, திராவிடர் கழக மாவட்ட தலைவர் தா.கிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் நாத்திக சிதம்பரம், ஒன்றிய செயலாளர் முருகன், நகர செயலாளர் மணி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆதி தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தந்தை பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களைக் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிடப்பட்டது.

;