உத்தரபிரேதச மாநிலத்தில் பாலியல் வன்கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணிற்கு நீதி கேட்டு கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திராவிடர் பண்பாட்டு கூட்டியக்கம் சார்பில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.