tamilnadu

img

மேட்டுப்பாளையம் சந்தைக்கு தில்லி கேரட் வரவு

மேட்டுப்பாளையம், மார்ச்12- மேட்டுப்பாளையத்தில் உள்ள காய்கறி சந்தைக்கு உதகை கேரட்டின்  வரத்து சரிந்ததால், விற்பனைக்காக தில்லியில் இருந்து கேரட் வரவழைக் கப்பட்டுள்ளது.  நீலகிரி மாவட்டத்தில் விளைவிக் கப்படும் மலைக்காய்கறிகள் அனைத் தும் சந்தைப்படுத்தபடும் இடமாக மேட்டுப்பாளையம் காய்கறி சந்தை உள்ளது. மேட்டுப்பாளையம் சந்தை யில் உள்ள 100க்கும் மேற்பட்ட காய் கறி மண்டிகளுக்கு நீலகிரியில் விளை யும் முட்டைக்கோஸ், கேரட், பீட்ரூட், பீன்ஸ், முள்ளங்கி, நூல்கோல் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் தின சரி லாரிகள் மூலம் டன் கணக்கில் வந்து  கொண்டிருக்கின்றன.  மேட்டுப்பாளையம் சந்தையில் இருந்து தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.  இந்நிலையில், கடந்த ஆண்டு நீலகிரியில் பெய்த தொடர் கனமழை காரணமாக மலைக்காய்கறிகள் விளை விக்கப்படும் விவசாய நிலங்கள் பெரும்பாலும் நீரில் மூழ்கி விட்டன. இதனால் அங்கு விவசாயம் பாதிக்கப் பட்டு காய்கறி உற்பத்தி வெகுவாக குறைந்து விட்டது. இதன் காரணமாக தற்போது மேட்டுப்பாளையம் சந் தைக்கு வரும் கேரட் வரத்து வெ குவாக குறைந்து விட்டது.  இதனிடையே, மேட்டுப்பாளை யம் சந்தையில் ஏற்பட்டுள்ள கேரட் தட்டுப்பாட்டை சமாளிக்க இங்குள்ள வியாபாரிகள் தில்லியிலிருந்து கேரட்டை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளனர். நாளொன்றுக்கு 25 டன்னிலிருந்து 30 டன் வரை  தில்லி கேரட் இறக்குமதி செய்யப்படு கிறது. தில்லியிலிருந்து குளிர்சாதன  வசதி மூலம் சுமார் 80 மணி நேர  பயணத்திற்கு பின்னர் மேட்டுப்பா ளையம் மார்க்கெட்டை வந்தடை கின்றது.  தில்லி கேரட்டின் அளவு மற்றும்  நிறம் உதகை கேரட்டைப் போலவே  தோற்றமளித்தாலும் மலை பிரதே சமான நீலகிரியில் விளையும் கேரட்டை விட சுவை குறைந்தது எனக் கூறும் வியாபாரிகள், உதகை கேரட் டின் வரத்து அதிகரிக்க துவங்கியவு டன் தில்லியில் இருந்து வரவழைக்கப டும் கேரடின் அளவு குறைக்கப்படும் என்கின்றனர்.