tamilnadu

மாணவி பாத்திமா மரணம் பேராசிரியர் சுதர்சன் மீது கொலை முயற்சி வழக்குப் பதிய வேண்டும்

கே.பாலபாரதி பேட்டி

திண்டுக்கல், நவ.17- சென்னை ஐ.ஐ.டி.யில் கேரள மாணவி பாத்திமாவின் மரணத்திற்கு காரணமான ஐ.ஐ.டி. பேராசிரியர் சுதர்சன் மீது கொலை முயற்சி வழக்குப் பதிய வேண்டும் என்று சட்ட மன்ற முன்னாள் உறுப்பினர் கே.பால பாரதி கூறியுள்ளார்.  திண்டுக்கல்லில் அவர் செய்தியா ளர்களுக்கு அளித்த பேட்டி:-மாணவி பாத்திமாவின் மரணம்வருத்த மளிக்கிறது. தனது மரணத்திற்கு பேராசிரி யர் சுதர்சன்பத்மநாபன் தான் காரணம் மரண வாக்குமூலத்தில் தெரிவித்து ள்ளார். பாத்திமாவின் ஒரு பெண் தன்னுடைய பெயரே தனக்கான பிரச்சனைக்குக் காரணம் என்று கூறுவது வேதனையானது.  இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தி லும் பாதுகாப்பு இல்லாததால் தான் பாத்திமாவின் படிப்பதற்கு அவரது பெற்றோர் தமிழ்நாட்டைத் தேர்ந்தெ டுத்ததாக தெரிவித்துள்ளனர். அந்த பெற்றோர் தமிழ் மண்ணின் மீது வைத்தி ருந்த மரியாதையையும் நம்பிக்கையையும் இழந்திருக்கிறோம். யாரோஒருவரைக் கைகாட்டி தப்பித்துக் கொள்ளாமல் பாத்திமாவின் பெற்றோர் அனுபவிக்கும் துயரத்திற்கு பதில ளிக்க தமிழக மக்கள் கடமைப்பட்டுள்ள னர். பேரா. சுதர்சன் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.  சிறுபான்மையினர், பட்டியலினத்தி னர், பெண்கள், ஆகியோருக்கு கல்வி உரிமை மறுக்கப்பட்டு வருகிறது. கல்வி அனைவருக்கும் பொதுவானது. அதை ஒரு சாராரரின் உடமையாக்க பாஜக அரசு முயற்சிக்கிறது.இவ்வாறு கே.பாலபாரதி கூறி னார்.