tamilnadu

img

ஓமன் மன்னர் மரணம் அரை கம்பத்தில் தேசிய கொடி

ஈரோடு, ஜன. 13 -  மத்திய அரசின் அறிவிப்பின் படி, ஓமன் மன்னர் மரணத்திற்கு இந்திய தேசியக் கொடி அரை கம்பத் தில் பறக்க விடப்பட்டு அரசு முறை துக்க நாள் அனு சரிக்கப்பட்டது.  அரபு நாடுகளில் நீண்ட காலம் மன்னராக இருந்த,  ஓமன் நாட்டின் மன்னர் சுல்தான் காபூஸ் பின் சையத் அல் மரணமடைந்தார். இந்தியாவில் திங்க ளன்று அரசு முறை துக்க நாள் அனுசரிக்க மத்திய அரசு அறிவுறுத்தியது. இதனால் இந்திய தேசியக் கொடி, பல இடங்களில் அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்ட  ஆட்சியர் அலுவலகம், எஸ்.பி. அலுவலகம் உள் ளிட்ட அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

;