கோவை, பிப். 13– நடிகர் விஜய் மீது கடும் விமர்ச னத்தை முன்வைக்கும் இந்துத்துவ அமைப்புகளின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அர்ஜுன் சம்பத் அளித்த விருதை விஜய்ரசிகர் ஒருவர் திருப்பியளித்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் மக்கள் இயக்கத்தின் கோவை மாவட்ட தலைவராக சம்பத் குமார் என்பவர் இருந்து வருகிறார். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சமூக சேவைகளை செய்ததற்காக, கடந்த 2014 ஆம் ஆண்டு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன்சம்பத் சேவகச்செம் மல் விருதினை சம்பத்குமாருக்கு வழங்கியுள்ளார். இந்நிலையில் அண்மை காலமாக நடிகர் விஜயை அர்ஜுன்சம்பத் தொடர்ந்து கடுமை யாக விமர்சித்து வருகிறார். இதனால் அதிருப்தியடைந்த சம்பத்குமார் அர்ஜுன்சம்பத் வழங்கிய சேவகச் செம்மல் விருதினை திருப்பி அனுப் பினார். முன்னதாக விஜய் ரசிகர்களு டன் திரண்டு வந்து ஆர்.எஸ் புரம் பகு தியில் உள்ள அஞ்சல் அலுவலகத் தில் இருந்து தபால் மூலம் விருதை திருப்பி அனுப்பினார். நடிகர் விஜயை அர்ஜுன் சம்பத் அநாகரீகமாக விமர் சித்து வருவது ரசிகர்கள் மற்றும் பொது மக்களிடையே மன வருத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்விருதினை திருப்பி அனுப்பியிருப்பதாகவும் கூறிய சம் பத்குமார், நடிகர் விஜயை கொச் சைப்படுத்துவதை அர்ஜுன்சம்பத் கைவிட வேண்டுமென தெரிவித்தார்.