கோவை, ஆக. 3 - நுண்நிதி பைனான்ஸ் மூலம் பெற்ற கடனை உடனே திருப்பி செலுத்த வலி யுறுத்தி ஆட்கள் வீட்டினுள் அமர்ந்து மிரட்டுவதாக மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தலைவர்கள் தலைமை யில் கோவை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து கோவை ராமநாதபு ரம் பனிமலர் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் ஜோதிமணி கூறுகையில், கொரோனா தொற்று காரணமாக ஊர டங்கு அமலில் உள்ளதாலும், பொது போக்குவரத்து இல்லாததாலும் பலர் பணிக்கு செல்ல முடியாத சூழலில் உள்ளோம். இதுதவிர, தங்கள் பகுதி யில் கொரோனா தொற்று ஏற்பட்ட தன் காரணமாக எங்கள் பகுதியில் சில இடங்கள் முழுவதும் அடைக்கப்பட் டுள்ளது. இதனால் வெளியே செல்ல முடியாத சூழலில் நாங்கள் உள்ளோம்.
இத்தகைய சூழலில், மைக்ரோ பைனான்ஸ் ஊழியர்கள் வீட்டிற்கு வந்து உள்ளே அமர்ந்து கொண்டு கட னாக வாங்கிய தொகையை உடனடி யாக செலுத்தினால் மட்டுமே வீட்டில் இருந்து வெளியேறுவோம் என்று கூறி ஆபாச வார்த்தைகளால் மிரட்டுகின்ற னர். நாங்கள் பணத்தை வட்டியுடன் செலுத்த தயாராக உள்ளோம்.
ஆனால், கொரோனா தொற்று குறை யும் வரை கால அவகாசம் வழங்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண் டும் என மனுவில் வலியுறுத்தியுள்ள தாக தெரிவித்தார். முன்னதாக, இம்மனுவினை மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.ராதிகா, பொருளாளர் ஜோதிமணி, மாநிலக்குழு உறுப்பினர் சுதா ஆகி யோர் தலைமையில் அதிகாரிகளிடம் அளித்தனர்.