tamilnadu

பேரூராட்சி பகுதிகளுக்கும் வேலைவாய்ப்பு திட்டத்தை உருவாக்கிடுக: வி.தொ.ச மனு கொடுக்கும் போராட்டம்

கோவை, அக்.6- பேரூராட்சி பகுதிகளில் உள்ள சிறு நகரங்களுக்கான வேலைவாய்ப்பு திட்டத்தை உருவாக்க மத்திய, மாநில அரசை வலியுறுத்தி அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்கத்தினர் மனு  கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய, மாநில அரசுகள் உடனடி யாக பேரூராட்சிப் பகுதிகள் உள்ளிட்ட  சிறு நகரங்களுக்கான வேலை வாய்ப்பு திட்டத்தை துவங்கிட வேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தை 200 நாளாகவும், தினக்கூலி ரூ.600 ஆகவும் உயர்த்தி வழங்கிட வேண்டும்.  கொரோனா கால நிவாரணமாக குடும்பத்திற்கு மாதத்திற்கு ரூ.7,500 வழங்கிட வேண்டும். 60 வயதை  கடந்த அனைவருக்கும் முதியோர் ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவது பல்வேறு மாவட் டங்களில் விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டத்தில் மதுக்கரை, பொள்ளாச்சி, ஆனைமலை, சூலூர், பெரியநாயக்கன் பாளையம், எஸ்.எஸ்.குளம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள பேரூராட்சி அலுவலகங்களில் கோரிக்கை மனு அளிக்கும் இயக்கம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வி.பி.இளங்கோவன், விவசாய தொழி லாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் துரைசாமி, செயலாளர் செல்வராஜ் மற்றும் ரவிச்சந்திரன், பெருமாள், ரவி மாரியப்பன், திருமலைசாமி, சண்மு கம் உள்ளிட்ட ஏராளமானோர் பங் கேற்றனர்.

சேலம்

சேலம் மாவட்டம், காடையாம் பட்டி, வாழப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற மனு கொடுக்கும் போராட்டத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க  மாநில பொதுச்செயலாளர் வி.அமிர்த லிங்கம், எம்.சின்ராஜ், மாவட்ட தலை வர் தங்கவேல், சிபிஎம் மாவட்ட செய லாளர் பி.ராமமூர்த்தி, தமிழ்நாடு விவ சாய சங்க மாவட்ட துணைத்தலைவர் அரியாகவுண்டர், மாவட்ட பொருளா ளர் அன்பழகன், விசைத்தறி சங்க துணைத் தலைவர் எஸ்.முத்துசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஈரோடு

ஈரோடு மாவட்டம், கோபி, நசி யனூர், பவானி, மொடக்குறிச்சி, வெள்ளோட்டாம் பரப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர்  விஜயராகவன், மாவட்ட செயலாளர் கே.பி.கனகவேல், மாவட்ட பொருளா ளர் என்.நாகராஜ், மாவட்ட துணைத் தலைவர் வி.ஆர்.மாணிக்கம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.  

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம்,  அவிநாசி  திருமுருகன்பூண்டி, தளி, மடத்துக்கு ளம், குமரலிங்கம், கணியூர், சங்கர மநல்லூர், குளத்துப்பாளையம், மூல னூர், ஊத்துக்குளி, குன்னத்தூர், முத் தூர், சின்னக்கம்பாளையம் உள்ளிட்ட பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்ற போராட்டத்தில் சங்கத்தின் மாவட்டத்  தலைவர் சுப்பிரமணி, மாவட்ட செய லாளர்  பஞ்சலிங்கம், மாவட்ட பொரு ளாளர் மணியன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.மது சூதனன், மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட பொருளாளர் ஆர்.வெங்கட் ராமன், மாவட்டத் துணைச் செயலா ளர் எஸ். வெங்கடாசலம் உள்ளிட்ட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  
 

தருமபுரி

தருமபுரி மாவட்டம் அரூர், பாப்பி ரெட்டிபட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற போரட் டத்தில் சங்கத்தின் மாவட்ட செயலா ளர் எம்.முத்து, மாவட்ட பொருளாளர் இ.கே.முருகன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சிசுபாலன், விவசாயிகள் சங்க வட்ட செயலாளர் எஸ்.கே.கோவிந்தன், தீர்த்தகிரி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யம் பகுதி ஆலாம்பாளையம் பேரூ ராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற  போராட்டத்தில் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.சம்பூரணம், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எம்.அசோகன், சிஐடியு தலைவர் கள் குமார், முத்துக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.