tamilnadu

img

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

நீலகிரி, டிச.20 - நீலகிரியில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்ப பெறக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  மத்தியில் ஆளும் பாஜக அரசாங் கம் மத அடிப்படையில் பிரிவினையை உருவாக்கும் குடியுரிமை திருத்தச் சட் டத்தை நிறைவேற்றி உள்ளது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் பொதுமக்கள், மாணவர்கள் பல்லாயிரக்கனக்கானோர் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .  இந்நிலையில் ்அவர்களை  குறிவைத்து காட்டுமிராண்டித்தனமான தாக்கு தலை நடத்தி வரும் அரசை கண்டித்து வியாழனன்று நீலகிரியில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர் பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், குடியுரிமை சட்டத் திருத் தத்தை திரும்பப் பெற வேண்டும். தேசிய குடிமைப் பதிவேட்டை ரத்து செய்ய வேண்டும். இலங்கை தமிழர் களுக்கு குடியுரிமை வழங்கிட வேண்டும். மாணவர்கள், பொது மக்கள் மீது தொடக்கப்படும் வன்மு றையை நிறுத்த வேண்டும் என  கோரிக்கைகளை வலியுறுத்தி முழக் கங்களை எழுப்பினர். நீலகிரி தேவர் சோலை  பஜாரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பிஜேஷ் தலைமை தாங்கினார். மாவட்டகுழு உறுப்பினர் எம்.ஆர். சுரேஷ் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். கே.வி.ஜோஸ்,ரெஜிஸ், ஜெபின், சிராஜ் ஆகியோர் கோரிக் கைகளை விளக்கிப் பேசினர்.    இதேபோல் குன்னூர் விபி தெரு வில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் ஜெ.ஆல்தொரை தலைமை வகித்தார். கோல்டி தேவா ரம், யோகேஷ், ஆகியோர் கோரிக் கைகளை விளக்கிப் பேசினர். இதில் பலர் கலந்து கொண்டனர்.