tamilnadu

ஈரோடு மாட்டு சந்தையில் ரூ.2.5 கோடிக்கு மாடுகள் விற்பனை

ஈரோடு, அக்.8- ஈரோடு கருங்கல்பாளையத்தில் வியாழனன்று கூடிய மாட்டு சந்தையில்  ரூ.2.5 கோடிக்கு மாடுகள் விற்பனையாகி யுள்ளது. ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு வியாழனன்று, ரூ.2 ஆயி ரம் முதல் ரூ.12 ஆயிரம் வரையிலான 150 கன்றுகள், ரூ.18 ஆயிரம் முதல் ரூ.36 ஆயிரம் வரையிலான 200 எருமை, ரூ.16 ஆயிரம் முதல், ரூ.32 ஆயிரம் வரை 250 பசு மாடு கள் விற்பனைக்கு வந்தன. ஈரோடு, கரூர், நாமக்கல், திண்டுக்கல், சேலம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் இருந்து மாடுகள் விற்பனைக்கு வந் தன. மகாராஷ்டிரா, கேரளா போன்ற வட மாநிலத்தில், அதிக அளவில் மழை பெய்வ தால், அங்கிருந்த வியாபாரிகள், விவ சாயிகள் குறைந்த எண்ணிக்கையில் வந்த னர். இதுபற்றி, மாட்டு சந்தை மேலாளர் ஆர்.முருகன் கூறியதாவது, ஆந்திரா, தெலுங் கானா, கர்நாடகா போன்ற மாநில வியாபா ரிகள் அதிகமாக வந்தனர். ஈரோடு மாட்டு  சந்தையில் ரூ.2.5 கோடிக்கு விற்பனை, கோவா, மத்திய பிரதேசம் போன்ற மாநி லங்களில், அதிகமாக மழை பெய்கிறது. மழையால், மாடுகளை கொண்டு செல்வது, பராமரிப்பது சிரமம் என்பதால், வியாபாரி கள், விவசாயிகள் வரவில்லை. இருப்பி னும், 80 சதவிகித மாடுகள் விற்பனையா னது. ரூ.2.5 கோடிக்கு விற்பனை நடந்துள் ளது. இவ்வாறு அவர் கூறினார்.