tamilnadu

கள்ள நோட்டுக்களை மாற்ற முற்பட்ட மூவர் கைது

கோவை, டிச. 5 –  கோவையில் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற மூன்று இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கோவை சிங்காநல்லூர் காவல் எல்லைக் குட்பட்ட பகுதியில் உள்ள சிப்ஸ் கடையில் மூன்று இளைஞர்கள் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்றுள்ளனர். இதைக்கண்டு சுதாரித் துக் கொண்ட கடை உரிமையாளர் காவல்து றையினருக்கு தகவல் கொடுத்தார். பின்னர் ரோந்து பணியில் இருந்த சிங்காநல்லூர் காவலர்கள் மூன்று இளைஞர்களை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில்,  ரசல் பிரான்சிஸ் (28), எல்விஸ் பிரான்சிஸ் (23), பாஸ்கர் (35) ஆகியோர் என தெரியவந்தது. இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு கொள்ளை வழக்குகள் நிலுவையிலிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்களை காவல்துறையினர் கைது செய்து, ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.