பொள்ளாச்சி, ஜூலை 5- பொள்ளாச்சி அடுத்த ஆழியாரில் உள்ள இலங்கைத் தமி ழர் முகாமில் ஒருவருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அப்பகுதியை கோட்டூர் பேரூ ராட்சி நிர்வாகத்தினர் சீல் வைத்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆழி யார் இலங்கைத் தமிழர் முகாமில் உள்ள ஒருவருக்கு கொரோனோ பரிசோதனை நடத்தப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அவர் கோவை இ.எஸ்.ஐ அரசு மருத்தவமனையில் சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்ட பகுதி முழவதும் வருவாய்துறையி னரால் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டு சீல் வைக்கப் பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் வசித்து வரும் அனைவ ருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைபடுத்தப்பட்டனர். பொள்ளாச்சியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருவது, அப்பகுதி மக்க ளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.