கோவை, மார்ச் 15 - தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவருக் கும், மற்றொரு நபருக்கும் கொரோனா அறிகுறி இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் அவரது ரத்த மாதிரிகள் கோவை அரசு மருத்துவமனையிலிருந்து பரிசோ தனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. கொரோனோ வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அச்சத்தின் காரணமாக தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டு வருகிறது. அனைத்து விமான நிலையங்களிலும் ஸ்கிரீனிங் முறையில் கொரோனோ வைரஸ் அறிகுறிகள் கண்கா ணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஏழு பேர் தமிழகத்தை சுற்றிப்பார்க்க கடந்த வாரம் சென்னைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் சனிக்கிழமையன்று ஈரோடு சென்றனர். இதனிடையே அந்த ஏழு பேரில் ஒருவரான டான் ரோசாக் (40) என்பவருக்கு காய்ச்சலுடன் சளி, இருமல் பாதிப்புகள் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து உடனிருந்தவர்கள் அவரை மீண்டும் தாய்லாந்துக்கு அனுப்ப கோவை விமான நிலையம் அழைத்து வந்த னர். அப்போது விமான நிலையத்தில் நடை பெற்ற சிறப்பு பரிசோதனையின் போது அவருக்கு கொரோனோ வைரஸ் அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த நபரை உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில் அனும தித்தனர். இங்கு இவரது ரத்தம் மற்றும் சலி மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப் பப்பட்டுள்ளது. அதேபோல், 27 வயது மற்றொரு நபரும் கொரோனோ அறிகு றியுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ கண்கா ணிப்பில் இருப்பதாக தகவல் வெளியா கியுள்ளது.