tamilnadu

கொரோனா பீதி - ஊருக்குள் மருத்துவரை அனுமதிக்காத அவலம்

கோவை, மே 19 -  மகாராஷ்டிர மாநிலத்தில் பணி புரிந்து கோவை திரும்பிய பெண்  பயிற்சி மருத்துவரை சக குடியிருப் புவாசிகள்  ஊருக்குள் அனுமதிக் காத சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப டுத்தியுள்ளது. கோவை மாவட்டம், பீளமேடு பகுதியில் உள்ள துலாக் வெங்கட சாமி வீதியில் உணவகம் நடத்தி  வருபவர்கள் நடராஜன்,  பத்மபி ரியா  தம்பதியினர். இவர்களது மகள் வாசுகி  கோவை நவக்கரை யில் உள்ள தனியார் கல்லூரியில் இயற்கை மருத்துவம் படித்து விட்டு, மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் நேச்சுரோ பதியில் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு  முழுவதும் ஊரடங்கு அறிவிக் கப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு சொந்த ஊரான கோவைக்கு திரும்ப முடிவெடுத்துள்ளார்  வாசுகி. இதனையடுத்து  புனே   மருத்துவமனையில், கொரோனா  வைரஸ் பரிசோதனை மேற் கொண்டார்.

இதில் அவருக்கு  கொரோனா தொற்று இல்லை என முடிவு வெளியானதையடுத்து கார் மூலம் கோவை திரும்பி னார். கோவை வந்த இயற்கை  மருத்துவர் வாசுகி, கோவை  அரசு மருத்துவமனையிலும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இந்த பரிசோ தனையிலும் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப் பட்டது. இதனையடுத்து இயற்கை மருத்துவர் வாசுகி பீளமேட்டில் உள்ள தனது வீட்டுக்குச் வந்துள்ளார். இதனையறிந்த அருகாமை  குடியிருப்புவாசிகள்  ஒன்றிணைந்து மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் இருந்து வந்துள்ள தால் வைரஸ் பாதிப்பு இருக்கும்  என்ற அச்சத்தில் வாசுகியை ஊருக்குள் அனுமதிக்க மறுத்தனர்.

வாசுகியின் பெற்றோர்கள் எவ்வளவோ கெஞ்சி கேட்டும் அனுமதிக்க மறுத்தனர்.  இதுகுறித்து கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடரா ஜன் கவனத்திற்கு வந்தது.  இத னையடுத்து, அவர் கோவை  மாநகர சுகாதார ஆய்வாளர்  சந்தோஷை தொடர்பு கொண்டு  நிலைமையை விளக்கினார். அவரும் உடனடியாக பீளமேடு  காவல்துறையினரை தொடர்பு  கொண்டு பேசியுள்ளார். இதனை யடுத்து சம்பவ இடத்திற்கு வந்த  காவல்துறையினர் எதிர்ப்பு  தெரிவித்த மக்களிடம் நிலையை  எடுத்து கூறினர். மேலும் காலை யில் சுகாதாரத்துறையினர் வந்து  உங்களிடம் விளக்கம் அளிப் பார்கள் என உறுதிகொடுத்து சமாதானம் செய்தனர். இதனை யடுத்து பொதுமக்கள் கலைந்து  சென்றனர். இருப்பினும் மருத்து வர் வாசுகி பொதுமக்களின் அச்சத்தை போக்குவதற்காக தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளார். கொரோனா வைரஸ் அச்சுறுத் தலை துணிவுடன் எதிர்கொண்டு மக்களை காக்கிற பணியில் மருத்து வர்கள் ஒருபுறம் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்க ளின் சேவையை பாராட்டி கைதட் டும் இதே மக்கள் தங்கள் பகுதிக்கு மருத்துவர் வந்தால் அவர்களை புறக்கணிப்பது போன்ற நடவ டிக்கை அதிர்ச்சியை ஏற்படுத் தியுள்ளது.