tamilnadu

ஆனைமலை விற்பனை கூடத்தில் ரூ.29.27 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்

பொள்ளாச்சி, பிப். 19- ஆனைமலை விற்பனை கூடத்தில் ரூ.29.27 லட்சத்திற்கு கொப்பரை ஏலம் செவ்வாயன்று நடைபெற்றது. பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாயன்று கொப்பரை ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில், ஆனைமலை, கோட்டூர், கோபாலாபுரம், ஒடையக்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் 700க்கும் மேற்பட்ட கொப்பரை மூட்டைகளை கொண்டு வந்திருந்தனர். அந்த கொப்பரை மூட்டைகள் தரம் பிரிக்கப் பட்டு, விற்பனை கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது.  இதில், முதல்தர 368 கொப்பரை மூட்டைகள் ஒரு கிலோ ரூ.95 முதல் ரூ.100 வரையிலும், இரண்டாம்தர 346 கொப் பரை மூட்டைகள் ஒரு கிலோ ரூ. 51 முதல் ரூ.75 வரையி லும் என விவசாயிகள் கொண்டு வந்த, மொத்தம் 35 டன் கொப்பரை மூட்டைகள் ரூ.29.27 லட்சத்திற்கு ஏலம் போனது. தற்போது மழையில்லாததால்  கடந்த வாரத்தை விட விவசாயிகள் கொண்டு வந்த கொப்பரை வரத்து அதி கமாக இருந்ததுடன் ரூ.2 முதல் ரூ.3 வரை கூடுதல் விலைக்கு போனது என ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.