நாமக்கல், ஆக. 27- நாமக்கல் அருகே தனிநபர் எதிர்ப்பால் நிறுத்தப்பட்ட சமுதாய நலக்கூடம் அமைக் கும் பணியை மீண்டும் தொடர்ந்திட வலியு றுத்தி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம், நவணி கிராமத்தில் அமைந் துள்ள தோட்டகூர்பட்டியில் சமுதாய நலக் கூடம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சமுதாய நலக்கூடம் அமைக்க உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து அரசு நத்த புறம்போக்கு நிலத்தில் அனை வரும் பயன்படுத்தக்கூடிய வகையில் சமு தாய நலக்கூடம் அமைக்க மாவட்ட நிர்வா கம் உத்தரவுபடி கட்டிடம் கட்ட பணிகள் துவக்கப்பட்டது. இந்நிலையில், இப்பகுதியில் வசித்து வரும் தனி ஒரு நபர், சமுதாய நலக்கூடம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தற்போது கட்டுமான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அதிருப்திக்குள்ளாகி உள்ளனர். ஆகவே, சமுதாய நலக்கூடம் உடனடியாக அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறத்தி அப்பகு தியைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் திங்க ளன்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.