திருப்பூர், ஆக.3 - யோகா போட்டியில் சிறப்பிடம் பிடித்த படியூர் ஊராட்சி பள்ளி மாணாக்கர்கள் பாராட்டப்பட்டனர். தமிழ்நாடு யோகா ஸ்போர்ட்ஸ் வளர்ச்சிக் கழகம் மற்றும் திருப்பூர் மாவட்ட யோகா பெடரேசன் இணைந்து பெம் பள்ளியில் மாநில அளவிலான யோகா போட்டியை நடத்தியது. இதில் கலந்து கொண்டு பன் முக யோகா திறன்களை செய்து காட்டிய காங்கேயம் படியூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணாக்கர் பி.சுபாஷ், எம்.ஜெயஸ்ரீ, எஸ்.நந் துஷா, எஸ்.தணுஸ்ரீ மற்றும் சி.நிதர்சனா ஆகியோர் சிறப்புப் பதக்கங்களும், பாராட்டுச் சான்றிதழும் பெற் றனர். இவர்களுக்கு திருப்பூர் மாவட்ட யோகா பெடரே சன் செயலாளர் அன்புத் தம்பி பதக்கங்களையும் தகு திச் சான்றிதழையும் வழங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் பானுஸ்ரீ கார்த்திகா, யோகா ஆசிரியர் காங் கேயம் காளியப்பன் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள், அலுவலர்கள் உடனிருந்து பாராட்டுத் தெரிவித்தனர்.