tamilnadu

img

தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

தருமபுரி, நவ.22- பொம்மிடி பகுதியில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை வெள்ளியன்று  பேரூராட்சி நிர்வாகத்தினர் பறிமுதல் செய்தனர்.  தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொ.மல்லாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன் பாட்டில் இருப்பதாக புகார்  எழுந்ததுள்ளது.இதை யடுத்து, பொ.மல்லாபுரம் செயல் அலுவலர் மா.விஜயன் தலை மையில், பேரூராட்சி பணியாளர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, உணவகங்கள், வணிக நிறுவனங்கள், இறைச்சிக் கடைகளில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்படுத்துவது தெரியவந்தது. இதையடுத்து, நெகிழிப் பொருள்களை பயன்படுத்திய கடைகளுக்கு ரூ. 3,200 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சோத னையில் சுமார் 22 கிலோ எடையுள்ள நெகிழிப் பொருள்களை பணியாளர்கள் பறிமுதல் செய்தனர்.  இதில், இளநிலை உதவியாளர் பெ. சந்தோஷ்குமார், க.பழனி, துப்புரவுப் பணி யாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண் டனர்.