tamilnadu

img

காய்கறி லாரியில் கடத்தி செல்லப்பட்ட குட்கா மூட்டைகள் பறிமுதல்

சேலம்,மே 22- பெங்களூருவில் இருந்து மது ரைக்கு காய்கறி லாரியில் கடத்திச் செல்லப்பட்ட ரூ.10 லட்சம் மதிப் பிலான குட்கா மூட்டைகளை சேலம் மாநகர காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் குட்கா மற்றும் புகை யிலை விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும் தடையை மீறி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தங்குதடையின்றி குட்கா விற்பனை நடைபெற்று வரு கிறது. தற்போது நோய் தடுப்பு நட வடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டுள்ளதால், மாநிலங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து  கடத்திக் கொண்டு வரப்படும் புகையிலை, குட்கா பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல் துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.  இந்நிலையில், பெங்களூருவில் இருந்து காய்கறி லாரியில் சேலம் வழியாக மதுரைக்கு குட்கா மூட்டை கள் கடத்தி செல்லப்படுவதாக  சேலம் மாநகர காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படை யில் கொண்டலாம்பட்டி சோதனைச் சாவடியில் காவல்துறையினர் தீவிர  வாகன தணிக்கையில் ஈடுபட்ட னர். அப்போது, பெங்களூரிலிருந்து மதுரைக்கு முட்டைக்கோஸ் ஏற்றிச் சென்ற லாரியில் 24 குட்கா மூட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கொண்டலாம்பட்டி காவல் துறையினர் ரூ.10 லட்சம் மதிப் பிலான குட்கா மூட்டைகள் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து லாரி ஓட்டுநர் ஜம்புவை கைது செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.