பென்னாகரம், ஜூலை 10- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த தோழர் பி.கே.கிருஷ்ணமூர்த்தியின் படத்திறப்பு விழா பென்னாகரத்தில் நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் நகரம் சுண்ணாம் புக்காரத் தெரு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை செயலாளராகவும், பென்னாகரம் நகர சிறு வியாபாரிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வந்த தோழர் பி.கே.கிருஷ்ணமூர்த்தி கடந்த ஜூன் 2 ஆம் தேதியன்று மரணமடைந்தார். அவரது படத்திறப்பு விழா மற்றும் நினைவேந்தல் கூட்டம் பென்னாகரம் காரல்மார்க்ஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு நகர செயலாளர் எஸ்.வெள்ளியங்கிரி தலைமை வகித்தார். நகர குழு உறுப்பினர் சபரி ராஜன் வரவேற்புரையாற்றினார். தோழர் பி.கே.கிருஷ்ண மூர்த்தியின் படத்தை சிபிஎம் மாநில செயற்குழு உறுப் பினர் கே.தங்கவேலு திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார். சிபிஎம் மாவட்ட செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.இளம்பருதி, எம்.ஆறுமுகம், வி.மாதன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சோலை அர்ஜுனன், விஸ்வநாதன், பி.எம்.முருகேசன், வி.ரவி, எம்.குமார் உள்ளிட்டோர் நினைவேந்தல் உரை யாற்றினர். முன்னதாக தோழர் பி.ஜே.கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்துக்கு குடும்பநல நிதி வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.