tamilnadu

img

தோழர் அசோக் நினைவேந்தல் நிகழ்ச்சி

நாமக்கல், ஜூலை 6- இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் நெல்லை மாவட்ட பொருளாளர் தோழர் அசோக்  சாதி வெறி கும்பலால் வெட்டி  படுகொலை செய்யப்பட்டர்.  அவரின் நினைவேந்தல் நிகழ்ச்சி நாமக்கல் மாவட்டத் தில் பல்வேறு இடங்களில் நடை பெற்றது. நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் வட்டாரத்திற்கு உட் பட்ட புதுப்பாளையம், சத்யா நகர், ஆயகாட்டூர், காவேரி  ஆர்எஸ், வசந்தநகர், அம்மன்நகர், அலமேடு, ஆவாரங்காடு ஆகிய கிளைகளில் தோழர் அசோக்கின் திரு உருவப்படம் வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி நினைவேந்தல் நிகழ்ச்சி நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் மாவட்ட தலைவர் இ.கோவிந்த ராஜ், மாவட்ட செயலாளர் என். கண்ணன்,மாவட்ட பொருளா ளர் வீ.மணிகண்டன், பள்ளிபாளை யம் ஒன்றிய செயலாளர் எம்.கே. பிரபாகரன், மாவட்ட குழு உறுப் பினர்கள் நந்தினி, லெனின், முன் னாள் மாவட்ட தலைவர்கள் எம்.அசோகன், ஆர்.ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.