கோவை, செப். 8- தியாகி அசோக் நினைவாக வாலிபர் சங்கம் சார்பில் ஞாயிறன்று பொள்ளாச்சி வடசித்தூர் பகுதியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நெல்லை மாவட்ட பொருளாளர் அசோக் படுகொலை செய்யபட்டர். அவர் நினை வாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பொள்ளாச்சி தாலுகா குழு விற்குட்பட்ட வடசித்தூர் கிளையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. தாலுகா தலைவர் கவிபாரதி தலைமையில் நடை பெற்ற இம்முகாமை மருத்துவர் சுரேந்தி ரன் துவக்கி வைத்தார். இதில், வாலிபர் சங்க பொள்ளாச்சி தாலுகா செயலாளர் அன்பரசன், பொரு ளாளர் பாலமுருகன் மற்றும் திலீபன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இம்முகாமில் உடுமலை அரசு மருத்துவ மனை ரத்த வங்கி குழுவினர் பங்கேற்று கொடையாளர்களிடமிருந்து ரத்தத்தை சேகரித்தனர். இதில் ஐம்பதுக்கும் மேற் பட்டோர் பங்கேற்று ரத்தானம் செய்தனர்.