tamilnadu

img

காலியாக உள்ள கள உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுக

மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை, அக். 23–  மின்வாரியத்தில் காலியாக உள்ள கள  உதவியாளர் பணியிடங்களை நிரப்ப  வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு மின்  ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் கோவையில் புதனன்று கவன ஈர்ப்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.  தமிழக மின்வாரியத்தில் ஏராளமான ஐடிஐ கள உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணியிடங்கள் நிரப் பப்படாததால் பணியில் இருக்கிற ஊழி யர்களுக்கு பணிச்சுமை அதிகரித்து மக்க ளுக்கான சேவைகள் தொய்வடைந்து வரு கிறது. மேலும், இயற்கை சீற்றம் போன்ற  பேரிடர்கள் நிகழ்கையில் இவ் ஊழியர்கள் சொல்லென்னா துயரத்தை அனுபவிக்கின் றனர். வேலையின்மை அதிகரித்து வருகிற நிலையில் வேலைவாய்ப்பற்ற தகுதியுள்ள இளைஞர்ககளை கொண்டு காலி பணி யிடங்களை நிரப்பிட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கோவை டாடாபத்தில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மின் ஊழியர் மத்திய அமைப்பின் நிர்வாகி ஆர்.செபஸ்டியன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து சிஐடியு  மின் ஊழியர் மத்திய அமைப்பின் மண்டல செயலாளர் வி.மதுசூதன் உரையாற்றினார். போராட்டத்தை வாழ்த்தி சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செய லாளர் கே.எஸ்.கனகராஜ், அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் எஸ்.கணேஸ், மின்  ஊழியர் சங்கத்தின் மாநில துணை தலை வர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உரை யாற்றினர். முன்னதாக, மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், மின்வாரியத்தில் அப்ரண்டிஸ் முடித்தவர்க ளுக்கு முன்னுரிமை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.