tamilnadu

வண்டல் மண் விற்பனை செய்வதை தடுக்கக்கோரி போராடிய விவசாயிகள் சங்கத் தலைவர்கள் கைது

நாமக்கல், ஜூலை 13- முறைகேடாக வண்டல் மண் விற்பனை செய் வதை தடுக்கக்கோரி போராடிய தமிழ்நாடு விவ சாயிகள் சங்க தலைவர்கள் கைது செய்யப்பட்டுள் ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  நாமக்கல் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி  வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, குமாரபாளையம் வட்டம், பள்ளிபாளையம் ஒன்றியம் அக்ரஹாரம் ஊராட்சி,  எளையாம்பாளையத்தில்  சர்வே எண் 104 ல் சுமார் 50 ஏக்கர் நிலம் அளவு கொண்டஏரி உள்ளது. இந்த ஏரியில் முதலமைச்சர் குடி மராமத்து பணியின் மூலம் வண்டல் மண் எடுக்க அரசு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், இதனை முறையாக விவசாயிகளுக்கு வழங்காமல், பல லட்சக் கணக்கான ரூபாய்களுக்கு இடைத்தரகர்களுக்கும், காண்ட்ராக்ட் காரர்களுக்கும் விற்பனை செய்து வந்தனர். இதனை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் வாலிபர் சங்கத் தலை வர்களை குமாரபாளையம் காவல்துறையினர் கைது  செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த நடவ டிக்கை கடும் கண்டனத்துக்குரியது என அந்த அறிக் கையில் அவர் கூறிப்பிட்டுள்ளார்.