tamilnadu

img

ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்டப் பணிகள் துவக்கம்

கோவை பி.ஆர்.நடராஜன் எம்.பி., நிதி ஒதுக்கிடு

கோவை, ஆக. 21-  கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் தொகுதி மேம் பாட்டு நிதியில் ரூ.40 லட்சம் மதிப் பீட்டில் கவுண்டம்பாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தரைத் தள தொட்டி திட்டம் அமைப்பது ஆகிய திட்டப்பணிகள் வெள்ளி யன்று துவக்கி வைக்கப்பட்டது. கோவை மாவட்டம், கீரணத்தம் பகுதியில் நியாய விலைக்கடை ரூ.16 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பீட்டிலும், வெள்ளமடை ஊராட்சியில் ரூ.14  லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை தொட்டி அமைக்கு பணிகள் மேற்கொள்வ தற்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் நிதி ஒதுக்கீடு செய்தார். இதனையடுத்து இத்திட்டம் துவங்குவதற்கான அடிக் கல் நடும் விழா வெள்ளியன்று நடை பெற்றது.  இந்நிகழ்வுகளில், திமுக கோவை மேற்கு மாவட்டச் செயலா ளர் பையாகவுண்டர், கீரணத்தம் ஊராட்சி மன்றத் தலைவர் பா. தோ.ராசு, ஊராட்சி மன்ற துணைத் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் எஸ்.எஸ்.குளம் ஒன்றியச் செயலாளருமான ஆர். கோபால், திமுக ஒன்றியக் கவுன்சி லர் எஸ்.பி.ராஜம்மாள் சுரேஷ், வெள்ளமடை வார்டு உறுப்பினர் சந் திரசேகர், எஸ்.எஸ்.குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் லதா, பொறி யாளர் அசோக், கீரணத்தம் ஊராட்சி மன்ற செயலாளர் பாலாஜி, 4 ஆவது வார்டு உறுப்பினர் குணசுந்தரி, கூட்டு றவு வங்கி முன்னாள் தலைவர்கள் சி.ரா.ரங்கசாமி, மா.பிரகாசம் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.