ஈரோடு, ஜூலை 27- இந்திய தொழிற்சங்க மையத் தின் ஈரோடு மாவட்ட மாநாடு சனியன்று எழுச்சியுடன் தொடங் கியது. இந்திய தொழிற்சங்க மையத் தின் (சிஐடியு) ஈரோடு மாவட்ட 10 ஆவது மாநாடு ஈரோடு செங் கோட்டை திருமண மண்டபத்தில் சனியன்று துவங்கியது. இம்மா நாட்டிற்கு மாவட்ட தலைவர் ஹெச். ஸ்ரீராம் தலைமை வகித் தார். மாவட்ட துணை செயலாளர் கனகராஜ் வரவேற்றார். மாநாட்டு கொடியினை மாவட்ட துணை தலைவர் என். முருகையா ஏற்றி வைத்தார். இதைத்தொடர்ந்து கோவை நாடாளுமன்ற உறுப் பினர் பி. ஆர். நடராஜன் சிறப்புரை யாற்றினார். சிஐடியு மாநில துணை தலைவர் எம்.சந்திரன், மாநில செயலாளர் கே.சி.கோபி குமார் மாநாட்டின் நோக்கங்களை விளக்கிப் பேசினர். சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ் சுப்பிர மணியன், பொருளாளர் ஸ்ரீதேவி ஆகியோர் அறிக்கை முன் மொழிந்து பேசினர். தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.எம்.முனுசாமி, விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.சண்முக வள்ளி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் பொதுச் செயலாளர் ப.மாரிமுத்து, தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் பி.பி.பழனி சாமி, ஆர். ரகுராமன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக, மூலப்பாளையம் பகுதியிலிருந்து மாநாடு நடைபெ றும் செங்கோட்டையா மண்டபம் வரை ஆயிரக்கணக்கான தொழி லாளர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. மேலும், வீரப்பன் சத்திரம் பகுதியிலிருந்து தோழர் கே.துரைசாமி நினைவாக எடுத்து வரப்பட்ட கொடி, பெருந்துறை யில் இருந்து நெல்லை அசோக் நினைவாக எடுத்து வரப்பட்ட ஜோதி மற்றும் சி. என். சிதம்பரம் நினைவு ஜோதி, பவானியில் இருந்து வி. நடராஜன், டி. ரவீந்தி ரன் ஆகிய நினைவாக எடுத்து வரப்பட்ட ஜோதிகள், கொடி மரம் மற்றும் கயிறு பெறப்பட்டது. இம்மாநாடு ஞாயிறன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.