tamilnadu

img

தியாகி பள்ளிபாளையம் சி.வேலுச்சாமி நினைவு தினம் கடைபிடிப்பு

நாமக்கல்,மார்ச் 10- பள்ளிபாளையத்தில் கந்து வட்டிக் கும்பலை எதிர்த்து போரா டியதற்காக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட தியாகி வேலுச்சாமி யின் 10ஆம் ஆண்டு நினைவு தினம் செவ்வாயன்று அனுசரிக்கப்பட் டது.  நாமக்கல் மாவட்டம், பள்ளிபா ளையத்தில் இயங்கும் விசைத்தறி களில் பணியாற்றும் தொழிலாளர் கள் கந்து வட்டிக் கும்பல்களால் பல் வேறு துன்பங்களுக்கு ஆளாகி வந் தனர். குறிப்பாக, விசைத்தறி தொழிலாளர்கள் குடும்பங்களை சேர்ந்த பெண்களை மிரட்டி, பாலி யல் வன்கொடுமையில் ஈடுபட்ட துடன் அதனை வீடியோவாக பதிவு செய்து பணம் பறித்தும் வந்த னர். இதனால் பல இளம் பெண்கள் தங்களது உயிரை மாய்த்துக் கொண்ட நிகழ்வுகளும் அரங்கே றின.

இதைத்தொடர்ந்து கந்துவட்டி கும்பலை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் வேரறுக்க வேண் டுமென வலியுறுத்தி தொடர்ந்து மக்கள் இயக்கங்களை மேற் கொண்டு வந்த மார்க்சிஸ்ட் கட்சி யின் கிளைச் செயலாளரான பள்ளி பாளையம் சி.வேலுச்சாமி கடந்த 2010 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதியன்று கந்துவட்டி கும்பலால் வெட்டிக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். தமிழ கத்தையே பெரும் அதிர்ச்சிக்குள் ளாக்கிய இந்த படுகொலையை தொடர்ந்து பல இடங்களில் கந்து வட்டி கும்பல்கள் ஒடுக்கப்பட் டன. இருப்பினும், இந்த கொலை வெறி கும்பல்களின் கொடூரங்கள் இன்றுவரை தீர்ந்தபாடிலில்லை. 

இந்நிலையில், தோழர் வேலுச் சாமியின் 10ஆண்டு நினைவு தினம் செவ்வாயன்று மார்க் சிஸ்ட் கட்சியின் சார்பில் அனுசரிக் கப்பட்டது. சிபிஎம் மாவட்டக் குழு அலுவலகம், பள்ளிபா ளையம், ஆவாரங்காடு, காவேரி ஆர்.எஸ் உள்ளிட்ட பகுதி களில் தியாகி வேலுச்சாமியின் உருவப் படத்திற்கு மாலை அணி வித்து செவ்வணக்கம் செலுத்தி னர். சிபிஎம் மாவட்டக்குழு அலுவ லகத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.கந்த சாமி தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ரங்கசாமி, ந.வேலுச்சாமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி. துரைச்சாமி, கு.சிவராஜ், என்.ஜோதி, விவசாய தொழிலாளர் சங்க தலைவர்கள் சபாபதி, எஸ்.சம்பூர்ணம், செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், பள்ளிபாளையத் தில் நடைபெற்ற நிகழ்விற்கு தியாகி வேலுசாமியின் சகோத ரர் சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன், ஒன்றியச் செயலா ளர் ஆர்.ரவி, ஒன்றியக் குழு உறுப் பினர்கள் காசிவிஸ்வநாதன், எம். கே.பிரபாகரன் உள்ளிட்ட திரளா னோர் கலந்து கொண்டனர்.