பிளாஸ்டிக் ஒழிப்பு, தூய்மை ஆகியவற்றை வலியுறுத்தி 2000 கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற பேரணி கோவையில் நடைபெற்றது. மாநகராட்சி மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் சார்பில் நடைபெற்ற இந்த பேரணியில் ஏராளமானேர் கலந்துகொண்டு பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டிய அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பாதாகைகளை ஏந்திச் சென்றனர்.தேசி துப்பரவு ஆணைய உறுப்பினர் ஜெகதீஷ் கிர்மானி, மாநகராட்சி ஆணையர் சர்வண்குமார் ஜதாவத் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.