tamilnadu

கோவை : கொரோனா விதிகளை செயல்பட்ட கடைக்கு சீல்

கோவை, ஆக. 30 - கோவையில் கொரோனா விதிகளை மீறி செயல்பட்டு வந்த கடைக்கு மாநகராட்சி அதி காரிகள் சீல் வைத்தனர். கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.51க்குட்பட்ட காந்திபுரம் 9 மற்றும் 10 ஆவது குறுக்கு சாலையில் பல்வேறு கடை கள் அமைந்துள்ளன. இக்கடைகள் அனைத் திற்கும் கொரோனா விதிகளை கடை பிடிக்க கோவை மாநகராட்சி அறிவுறுத்தி யுள்ளதையடுத்து அவ்வப்போது மாநக ராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வரு கின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் செயல்பட்டு வரும் மொபைல் கடை ஒன்று தொடர்ந்து 5 முறை அபராதம் விதிக்கப் பட்ட நிலையில் மீண்டும் சனியன்று நேராய்வின்போது முகக்கவசம் அணியா மலும், தனிமனித இடைவெளியினை கடைபிடிக்காமலும் அலட்சியப்போக்குடன் செயல்பட்டு வந்துள்ளது. இதனை கண்டித்த அதிகாரிகள் மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் உத்தரவின்பேரில் கடையினை பூட்டி சீல் வைத்தனர்.

;