கோவை, ஜூன் 8 - அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு 50 சதவிகித இருக்கைகள் கொண்டு கோவை யில் திங்கள் முதல் ஹோட்டல்கள் செயல் பட துவங்கியது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 2 மாத காலமாக உணவகங்கள் அனைத் தும் மூடப்பட்டது. தற்போது இந்த 5 ஆம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக் கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் ஹோட்டல்களில் அமர்ந்து உணவு உண்ண திங்கள் முதல் அனுமதி கொடுக்கப்பட்ட தால் விதிகளை கடைபிடிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, கோவையில் உள்ள பெரிய உணவகங்களில் உடல் வெப்ப பரிசோ தனை கருவிகள் கொண்டு அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்யபட்ட பிறகு உணவ ருந்த அனுமதிக்க படுகின்றனர்.
வெப்ப நிலை அதிகமாக இருப்பவர்கள் அனுமதிப் பதில்லை. அனைத்து மேசைகளிலும் சானி டைசர் வைத்தும், கையை கிருமி நாசினி கொண்டு கழுவிய பின்னரே அனுமதிக்கப் படுகின்றனர். குளிர் சாதன வசதிகொண்ட அறை களை இயக்காமல், 50 சதவிகித இருக்கை கள் மட்டுமே கொண்டு செயல்பட துவங்கி உள்ளது. மேலும் மேசைகளுக்கு இடையே தனிமனித இடைவெளி விட்டு அமர்ந்து உணவு அருந்த வைக்கபடுகின்றனர். ஊழி யர்கள் அனைவரும் முககவசம் அணிந்து உணவுகளை பரிமாறி வருகின்றனர்.