கோவை, அக். 26 - கொரோனா காலத்தில் குழந்தைகளின் உடல்நல பிரச்சினைகளுக்கு சிறந்த சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதாக கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரி வித்துள்ளனர். இதுகுறித்து கோவை அரசு மருத்துவமனை குழந்தை கள் நல மருத்துவர்கள் தெரிவித்ததாவது, கொரோனா அதிகம் பரவி வரும் இக்காலகட்டத்தில் குழந்தைகளுக்கு தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத் தில் உணவுக்குழாய் மற்றும் அடிவயிற்றில் அடைப்பு உள்ளிட்ட உடல்நலக்குறைவோடு பிறந்த 20க்கும் மேற் பட்ட குழந்தைகளுக்கு அவசர அறுவை சிகிச்சைச் சார்ந்த உயர்தொழில் நுட்ப சிகிச்சைமுறைகள் அளிக்கப்பட்டுள் ளது. மேலும், 1 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகள் கல்லீரல் புண்கள் மற்றும் குடலிறக்கம் உள்ளிட்ட நோய்களு டன் இருந்ததால் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு தற் போது நலமுடன் உள்ளனர். இந்த அனைத்து சிகிச்சைக ளும் முறையான பாதுகாப்பு உபகரணங்களோடு அளிக்கப் பட்டன என மருத்துவர்கள் தெரிவித்தனர்.