tamilnadu

img

கோவை - பெங்களூர் இரவு நேர ரயில் முன்மொழிவு தென்னக ரயில்வே துறைக்கு பி.ஆர்.நடராஜன் பாராட்டு

கோவை, ஜூலை 20 –  கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான பெங்களூர் இரவு நேர ரயில் மற்றும் தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் ரயில் சேவைக்கான முன்மொ ழிவைப் பரிந்துரைத்த தென்னக ரயில்வே துறைக்கு நன்றி தெரி வித்துக் கொள்கிறேன். இதே போல் இதர கோரிக்கைகைக ளையும் நிறைவேற்ற வேண்டும் என பி.ஆர்.நடராஜன் எம்.பி., கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, தென்னிந் தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை மாவட் டத்தில் ரயில் சேவை முக்கியப் பங் கினை வகித்து வருகிறது. இதன் காரணமாகவே அதிக வருவாய் ஈட்டிக்கொடுக்கிற ரயில் நிலைய மாகவும் கோவை இருந்து வருகி றது.

தொழில், கல்வி, மருத்துவம் ஆகிய தேவைக்காக இதர மாநி லங்கள் மற்றும் தமிழகத்தின் இதர மாவட்டங்களில் உள்ள பல்வேறு தரப்பட்ட மக்கள் கோவை மாவட் டத்திற்கு வந்து செல்கின்றனர். இருப்பினும் போதிய ரயில் சேவை இல்லாதிருப்பது குறித்து பல முறை மத்திய ரயில்வே அமைச்ச கத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. மேலும் பொது மக்கள், அரசியல் கட்சிகள், அமைப்புகள் என பலரும் ஒருங்கி ணைக்கப்பட்டு ரயில்வே போராட் டக்குழுவின் மூலம் அரசின் கவ னத்தை ஈர்க்க பல கட்டப் போராட் டங்களையும் நடத்தியுள்ளோம்.  இதன் தொடர்ச்சியாக கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கோவை முதல் பெங்களூர் வரையிலான இரவு நேர ரயில் சேவை, கோவை -ராமேஸ்வரம், கோவை - திருநெல் வேலி எக்ஸ்பிரஸ், திருநெல்வேலி - மதுரை பயணிகள் ரயில் கோவை வரை நீட்டிப்பு ஆகிய கோரிக் கைகள் தொடர்பாக தென்னக ரயில்வே, தில்லி ரயில்வே ஆணை யத்திற்கு பரிந்துரை செய்துள் ளதை கோவை மக்களின் சார்பில் வரவேற்கிறேன். கொரோனா காலத்தில் ரயில்களை இயக்குவ தற்கு தாமதமானாலும், தில்லி ரயில்வே ஆணையம் தென்னக ரயில்வே முன்மொழிந்துள்ள பரிந் துரைகளுக்கு உடனடியாக அனு மதி வழங்க வேண்டும்.  மேலும், கோவை - தென்காசி, கோவை – தூத்துக்குடி ஆகிய இரண்டு ரயில்களுக்கான கோரிக் கையை தென்னக ரயில்வே பரிந் துரை செய்யாதது வருத்தம் அளிக் கிறது. இந்த இரண்டு ரயில்களுக் கான தேவையையும் கருத்தில் கொண்டு உடனடியாக தில்லி ரயில்வே ஆணையத்திற்கு தென் னக ரயில்வே பரிந்துரை செய் யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.  இதேபோல், மத்திய பட்ஜெட் கூட்டத்தில் மங்களூர் - கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை மேட்டுப்பாளையம் வரை நீட் டிப்பது என அறிவிக்கப்பட்டது.

ஆனால், இதுநாள் வரையிலும் அவை நடைமுறைப்படுத்தப்படா மல் இருப்பது ஏற்புடையதல்ல. எனவே உடனடியாக இதனை நடைமுறைப்படுத்த வேண்டும். மாவட்டத்தின் பல்வேறு பகுதிக ளில் நடைபெறும் தரைப்பாலம், ரயில்வே மேம்பாலங்கள் விரை வில் கட்டி முடிக்கவும், கோவை ரயில் நிலையத்தை மேம்படுத்து தல், பீளமேடு, சோமனூர், இரு கூர், பெரியநாயக்கன் பாளையம் ஆகிய ரயில் நிலையங்களில் பய ணிகளின் எண்ணிக்கை அதிக ரித்து வருவதால் நடைமேடையின் நீளத்தை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித் தும் உடனடியாக பரிசீலனை மேற் கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் பி.ஆர்.நடரா ஜன் எம்.பி., குறிப்பிட்டுள்ளார்.

;