கோவை. நவ. 4- கோவையில் ஐம்பொன் சிலை கடத்தலில் ஈடுபட்ட மூவரை காவல் துறையினர் கைது செய்து சிறை யில் அடைத்தனர். கோவை வெரைட்டி ஹால் சாலை காவல் ஆய்வாளர் தலை மையில் காவலர்கள் இடையர் வீதி சந்திப்பில் ரோந்து பணியில் ஈடு பட்டிருந்தனர். அப்போது சந்தே கத்திற்கிடமான வகையில் அங்கு நின்று கொண்டிருந்த சிலர் காவல் துறையினரை கண்டதும் தப்பி யோட முயற்சித்தனர். சிலர் தப்பி யோடிய நிலையில் இருவரை மடக்கி பிடித்து, அவர்கள் வைத்தி ருந்த பையை காவல்துறையினர் சோதனை செய்தனர். இதில், சிறிய அளவிலான சிலை ஒன்று இருந்தது. அச்சிலை குறித்து விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணான தகவல் அளித்தனர். இதன்பின் மேற் கொண்ட விசாரனையில், அவர்கள் சலிவன் வீதியைச் சேர்ந்த உதய குமார் என்பவரின் மகன் ஜெயச்சந் திரன் மோகன், பேரூர் அமுல்நக ரைச் சேர்ந்த மோகன் என்பவரின் மகன் வெங்கடேஷ் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் இரு வரையும் கைது செய்த சிறையில் அடைத்தனர். மேலும், தப்பித்துச் சென்றவர் களை தேடி வந்த நிலையில், ஒட்டக் சத்திரத்தைச் சேர்ந்த திருநாவுக் கரசு, கன்னிவாடியைச் சேர்ந்த அருண், பண்ணைப்பட்டியைச் சேர்ந்த தீனதயாளன் ஆகியோரை கன்னிவாடி அருகே தனிப்படையி னர் சுற்றிவளைத்து பிடித்தனர். இந்த மூன்று பேரிடமும் விசாரணை மேற்கொண்டபோது அவர்கள், 33 கிலோ மற்றம் 20 கிலோ எடையி லான இரண்டு ஐம்பொன் சிலை களை கடத்த முயன்றது தெரிய வந்தது. அதை பறிமுதல் செய்த காவல் துறையினர் 3 பேரையும் சிறையில் அடைத்தனர்.