tamilnadu

கோவை: திருநங்கை கொலையில் ஒருவர் கைது

கோவை, அக். 23– கோவை சாய்பாபா காலனி அருகேயுள்ள என்.எஸ்.ஆர் சாலையைச் சேர்ந்தவர் சங்கீதா என்ற பண்ணாரி (65).  திரு நங்கையான இவர் மற்ற திருநங்கைகளுடன் சேர்ந்து வட கோவை அருகே  டிரான்ஸ் கிச்சன் என்கிற உணவகம் நடத்தி வந்தார்.

திருநங்கைகள் நலச்சங்கத்தின் மாவட்ட தலை வராகவும் இருந்த சங்கீதா கடந்த புதனன்று அவரது வீட்டில் உள்ள டிரம்மில் கழுத்தறுக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட் டார். இந்த சம்பவம் தொடர்பாக சாய்பாபா காலனி காவல் துறையினர் கொலை வழக்குப் பதிந்து விசாரணை மேற் கொண்டு வந்தனர்.  

இதன் முதற்கட்ட விசாரணையில், திருநங்கை சங்கீதா வின் உணவகத்தில் பிரியாணி மாஸ்டராக பணியாற்றிக் கொண்டு, அவரது வீட்டில் தங்கியிருந்த நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடியைச் சேர்ந்த ராஜேஷ் என்ற இளை ஞர் சம்பவத்திற்கு பிறகு தலைமறைவானது தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவான ராஜேஷை காவல் துறை யினர் தேடி வந்தனர்.

இதையறிந்த ராஜேஷ், சங்கனூர் கிராம நிர்வாக அலுவலரிடம் வியாழன்று சரண் அடைந் தார். அவரை சாய்பாபா காலனி காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.