tamilnadu

img

கோவை: மூத்த நரம்பியல் மருத்துவர் கொரோனாவிற்கு பலி

கோவை, ஆக.1- கோவையில் கொரோனா தொற்று கார ணமாக 82 வயதான மூத்த நரம்பியல் மருத்துவர் பிரனேஷ்  தனியார் மருத் துவமனையில் உயிரிழந் தார். கோவை டாடாபாத்  பகுதியைச் சேர்ந்தவர் மூத்த நரம்பியல்  மருத்துவர் பிரனேஷ் (82). இவர் அதே பகுதியில் கிளினிக் ஒன்றை நடத்தி வந்தார். இந்நிலையில் அவருக்கு கொரோனா  தொற்று ஏற்படவே, கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  ஏற்கனவே ஆஸ்துமா பிரச்சினையில்  இருந்த மருத்துவர் பிரனேஷ், சனியன்று காலை  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் கோவை அரசு மருத்துவகல்லூரி  பேராசியராகவும், கோவையில் உள்ள பிரபல  தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றியும் வந்தவர். மருத்துவர் பிரனேஷ்  உயிரிழந்த தற்கு  இந்திய மருத்துவ சங்கத்தினர் இரங்கலை தெரிவித்துள் ளனர்.

;