சேலம், அக்.23- சேலத்தில், கல்லூரி மாணவர்களிடையே கோக்கோ போட்டி செவ்வாயன்று நடைபெற்றது. இப்போட்டியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு விளை யாட்டு திறனை வெளிப்படுத்தினர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு இடையிலான கோக்கோ போட்டி சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் சேலம், தருமபுரி, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 20க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த 500க்கு மேற்பட்ட மாண வர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற மாண வர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்கள் அகில இந்திய அளவில் கல்லூரி களுக்கு இடையிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.