tamilnadu

img

சுற்றுலா தலங்கள் மூடல்

உதகை, மார்ச் 18- கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க உதகை யிலுள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன.   கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் அனைத்தையும் மூடுவதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தர விட்டுள்ளது. இதன் காரண மாக அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா,  படகு இல்லம், தொட்ட பெட்டா மலைசிகரம், பைக் காரா படகு இல்லம், குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, கோத்த கிரி நேரு பூங்கா உள்ளிட்ட அனைத்து சுற்றுலாத் தலங்களும் செவ்வாயன்று மதியம் முதல் மூடப்பட்டது. மேலும், வருகை தந்த சுற்று லாப்பயணிகள் சொந்த ஊருக்கு திரும்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.  இதனால் சுற்றுலாப் பயணி களை நம்பியுள்ள வியா பாரிகள் மற்றும் விடுதி  உரிமையாளர்கள்  கவலை யில்  ஆழ்ந்துள்ளனர். 

;