tamilnadu

இந்திய ராணுவத்தில் பணியாற்றுவதாகக் கூறி தம்பதியரிடம் ரூ.1.5 லட்சம் மோசடி

கோவை, ஆக. 1 -  இந்திய ராணுவத்தில் பணியாற்றுவதாகவும், இணையதளத்தில் கார் விற்பனை செய்வதாகவும் கூறி கோவை தம்பதியினரிடம் ரூ.1.5 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. கோவை துடியலூரை அடுத்த சோமையம்பாளை யம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (38). இவர் அதே பகுதியில் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார். ஓ.எல்.எக்ஸ் செயலியில் கார் ஒன்றைப் பார்த்து வாங்க முடிவு செய் துள்ளார்.

இந்நிலையில், அந்த காரின் உரிமையா ளர் என்று கூறிக்கொண்ட நபர் தான் இந்திய ராணு வத்தில் பணியாற்றுவதாகவும், தற்போது பெங்களூ ரில் இருப்பதால் காரை விற்பனை செய்வதாகவும் அதன் விலை ரூ.2 லட்சம் என்றும் கூறியுள்ளார். மேலும், தான் ராணுவத்தில் பணியாற்றுவதற் கான ஐ.டி கார்டு ஆதாரங்களையும் அனுப்பியுள்ளார். ராணுவத்தில் வேலை செய்வதாகக்  கண்மூடித்தன மாக நம்பிக்கை வைத்த கண்ணன் தவணை முறையில் ரூ.1.50 லட்சத்தை அந்த நபரின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளார். இதைத்தொடர்ந்து அந்த நபர் காரையும் வழங்காமல், வாங்கிய பணத்தையும் திரும்ப கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.

இதற் கிடையே மனமுடைந்த கண்ணன் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைத்தொடர்ந்து, பணத்தை மீட்டுத்தரக் கோரி கண்ணனின் மனைவி கவிதா கோவை மாவட்ட காவல் கண்காணிபாளரிடம் புகார் அளித்தார். இது குறித்து கவிதா கூறுகையில், “வீட் டில் உள்ள நகைகளை விற்று பணம் அனுப்பினோம். ஆனால், தற்போது ஏமாந்து போய் நிற்கிறோம். இதுகுறித்து தடாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்த பொழுது அவர்கள் புகாரை ஏற்க மறுத்து எங் களை வெளியேற்றினர்.  எங்களது பணத்தை எப்படி யாவது மீட்டுக் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

;