சேலம், மே 17-உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் (சிஐடியு) 16 ஆவதுதமிழ் மாநில மாநாடு சேலம் புதிய பேருந்து நிலையம் ஹோட்டல் பாலகிருஷ்ணாவில் (தோழர் சரஸ்வதிநினைவரங்கத்தில்) மே 18 ,19 ஆகியதேதிகளில் நடைபெற உள்ளது.அனைவருக்கும் குறைந்தப்பட்ச கூலி ரூ.18 ஆயிரம் வழங்கிடவும், பணியிடங்களில் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான சட்டங்களை அமல்படுத்த வேண்டும். சம வேலைக்கு சம கூலி வழங்க வேண்டும்என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் 11 ஆவது தமிழ் மாநில மாநாடு சேலத்தில் சனி மற்றும் ஞாயிறுஆகிய இருதினங்கள் நடைபெற இருக்கிறது. இம்மாநாட்டிற்கு அமைப்பின் மாநில செயலாளர் டி.டெய்சி தலைமை வகிக்கிறார். இதில் சிஐடியு மாநில தலைவர்அ.சவுந்தரராஜன், மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாரன், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் அகில இந்திய கன்வீனர் ஏ.ஆர்.சிந்து, அகில இந்திய துணைத் தலைவர் மாலதி சிட்டிபாபு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.சுகந்தி, எம்.மகாலட்சுமி, வரவேற்புக் குழு தலைவர் டி.உதயகுமார். சிஐடியு மாவட்ட தலைவர் பி.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்று பேச உள்ளனர். முன்னதாக, சனியன்று(இன்று) மாலை 4 மணிக்கு சேலம் புதிய பேருந்துநிலையம், சின்னேரி வயல், வி.பி.சிதன் நினைவகத்தில் இருந்து உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் மாபெரும் பேரணி துவங்குகிறது.