tamilnadu

img

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து சிஐடியு பிரச்சார இயக்கம்

கோவை, நவ.19 – மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத, தொழிலா ளர் விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி சிஐடியு சார் பில் கோவையில் பிரச்சார இயக்கம் செவ்வாயன்று துவங்கி யது.  தொழிற்சங்க உரிமை, கூட்டு பேர உரிமையை நிலை நாட்ட வேண்டும், பொருளாதார நெருக்கடியால் வேலையி லிருந்து வெளியேற்றப்படும் தொழிலாளர்களின் வாழ்வாதா ரத்தை பாதுகாத்திடு, விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாத்திடு, நூறு நாள் வேலை திட்டத்தை விரிவுபடுத்த  வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத் தும், ஜனவரி 8 ஆம் தேதியன்று நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தின் நோக்கங்களை விளக்கி யும் சிஐடியு சங்கத்தின் சார்பில் கோவையில் ஆறு சட்டமன்ற தொகுதிகளில் பிரச்சார இயக்கம் செவ்வாயன்று துவங் கியது.  இந்த பிரச்சார இயக்கத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்மநாபன், செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொருளா ளர் ஆர்.வேலுசாமி மற்றும் நிர்வாகிகள் கே.மனோகரன், எஸ்.ஆறுமுகம், கே.ரத்தினகுமார், என்.செல்வராஜ், ஆர்.கேசவ மணி, சுகுமாறன், எஸ்.மூர்த்தி, பஞ்சலிங்கம், கே.எம்.ரபீக், இரா.செல்வம், ஏ.எல்.ராஜா, என்.வி.தாமோதரன்  உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர். இப்பிரச்சார இயக்கத்தில் சிஐடியு சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.