tamilnadu

img

சிஐடியு நாமக்கல் மாவட்ட 7ஆவது மாநாடு பேரணியுடன் துவங்கியது

நாமக்கல், ஆக. 4- சிஐடியு நாமக்கல் மாவட்ட 7  ஆவது மாநாடு ஞாயிறன்று பேரணி யுடன் ராசிபுரத்தில் துவங்கியது. சிஐடியு நாமக்கல் மாவட்ட மாநாடு 4,5  தேதிகளில் ராசிபுரத்தில்  நடைபெறுகிறது. முதல் நாள் நிகழ் வாக ராசிபுரத்தில் முக்கிய வீதி களின் வழியாக நடைபெற்ற பேரணி என்பிஎஸ் தனியார்  திருமண மண்டபத்தை வந்த டைந்தது. முன்னதாக பேரணியை சிஐடியு மூத்த தலைவர் கே. நாராயணன் துவக்கி வைத்தார். இதில் மாநில செயலாளர் கே.சி.கோபிகுமார், மாநில துணைத் தலைவர் எஸ்.சுப்ரமணியன், மாநில செயலாளர் டி.டெய்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி உள்ளிட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர்.  

இதனைத் தொடர்ந்து தோழர் எஸ்.கே.சேஷாசலம் தோழர் எஸ். முத்துக் குமார் நினைவரங்கில் சிஐடியு மாவட்ட மாநாடு துவங்கியது. மாநாட்டுக் கொடியினை சிஐடியு  மூத்த தலைவர் எம்.ஜி.ராஜகோ பால் கொடியேற்றி வைத்தார். முதல் நாள் பொது மாநாட்டிற்கு சிஐடியு மாவட்ட தலைவர் பி. சிங்காரம் தலைமை வகித்தார். மாவட்ட உதவிச் செயலாளர்  கு.சிவராஜ் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். வரவேற்புக் குழு செய லாளர் ஜீ.செல்வராஜ் வரவேற்பு ரையாற்றினார். சிஐடியு மாநில செய லாளர் கே.சி.கோபிகுமார் பொது மாநாட்டை துவக்கி வைத்து உரை யாற்றினார். மாவட்ட செயலாளர் ந. வேலுசாமி, மாவட்ட பொருளாளர் ஏ.கே.சந்திரசேகரன் ஆகியோர் அறிக்கை சமர்ப்பித்தார்.  முன்னதாக, சிஐடியு அரசு போக்குவரத்து கழக முன்னால் செய லாளர் வீ.சீனிவாசன், முன்னால் சிஐடியு மாவட்டத் தலைவர் சி. மோகன், சுமைப்பணி சங்கத் தலைவர் என்.பி.ராஜன் ஆகி யோரின் நினைவாக கொடி பயண  நிகழ்வு நாமக்கல் அரசு போக்கு வரத்து கழக பணிமனை முன்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிஐடியு மாவட்ட பொருளாளர்  ஏ.கே.சந்திரசேகர் தலைமை வகித் தார். இப்பயணத்தை தமிழ்நாடு  பால் உற்பத்தியாளர் சங்க  முன்னாள் மாநில பொதுச்செய லாளர் ஏ.ரங்கசாமி துவக்கி வைத் தார்.  இதில் சிஐடியூ மாவட்ட தலைவர் பி.சிங்காரம், திருச்செங் கோடு கிளை செயலாளர் தீன தயாளன். நாமக்கல் கிளை செய லாளர் வரதராஜன், துணைத் தலைவர் சுப்பிரமணி, மோட்டார் இஞ்சனிரிங் தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் சு.சுரேஷ், ஓய்வு பெற்ற மின் ஊழியர்  அமைப்பின் மாவட்ட இணைச் செயலாளர் மணிவேல், சுமைப் பணி தொழிலாளர் சங்க தலைவர் ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர். இதையடுத்து திங்களன்று  (இன்று) மாநாடு தொடர்ந்து நடை பெறுகிறது.