tamilnadu

img

நெல்லையில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி, ஜூலை 10- நெல்லையில்  தொழிலாளர் களுக்கு சிகிச்சை அளித்துவரும் இஎஸ்ஐ மருத்துவ மனையை கொரோனா தொற்று  நோயாளி களுக்காக  கையகப்படுத்துவதை நிறுத்தி தனியார் மருத்துவமனை யை கொரோனா தொற்று நோயா ளிகளுக்கு பயன்படுத்த கோரி சிஐ டியு ஆர்ப்பாட்டம் நடத்தியது. நெல்லை வண்ணாரப்பேட் டையில் இயங்கி வரும்  இஎஸ்ஐ மருத்துவமனையில் திருநெல் வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்ட தொழிலாளர்கள்  சிகி ச்சை பெற்று பயன் பெற்று வரு கின்றனர் எனவே தொழிலாளர் கள் மருத்துவம் பெறும் இ.எஸ்.ஐ மருத்துவமனையை மாவட்ட நிர்வாகம் கையகப்படுத்துவதை கைவிட வேண்டும்

மேலும் ஊரடங்கு காரணமாக தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து கள் ஐஆர்டி பாலிடெக்னிக் வளா கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டி ருந்தது நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்துகளில் டீசல் திருடர்கள் மீது காவல்துறை உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கையை வலி யுறுத்தி நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வாயிலில் வெள்ளிக்கிழமை காலை சிஐ டியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் மோகன் தலைமை தாங்கினார் .ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் சுடலை ராஜ், மாநில குழு உறுப்பினர் பெருமாள், சிஐடியூ நிர்வாகிகள் ஜோதி, அருண் உட்பட  ஏராளமானோர் கலந்து கொண்டனர் தொடர்ந்து கோரிக்கை மனு மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப் பிக்கப்பட்டது.