சேலம், ஜூலை 30- சேலம் இந்தியன் ஆயில் எல்பிஜி பாட்டலிங் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கிட வலியுறுத்தி ஐஓசி ஆலை முன்பு தமிழ்நாட்டு பெட்ரோலியம் கேஸ் ஒர்கர்ஸ் யூனியன் சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் கருப்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் எல் பிஜி பாட்டலிங் பிளான்ட் ஆலை யில் கடந்த 32 வருடங்களாக பணி யாற்றி வரும் ஒப்பந்த தொழிலா ளர்களுக்கு எவ்வித சட்ட சலுகை களையும் அமல்படுத்தாமல் வேலை வாங்கப்பட்டு வருகிறது. இந்நிலை யில் தற்போதுள்ள தொழிலாளர் களை வெளியேற்றி விட்டு புதிய தொழிலாளர்களை பணியில் அமர்த்தும் நடவடிக்கையை ஆலை நிர்வாகம் மேற்கொண்டு வருகி றது. இதனால் அங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்கள் அனைவரும் தங்களது வாழ்வாதாரத்தை இழக் கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, வேலை செய்ய தகுதி உள்ள தொழிலாளர்களுக்கு மீண் டும் வேலை வழங்க வேண்டும். நிர்வாகம் ஏற்றுக் கொண்ட அடிப் படையில் பணிக்கொடை, விடுப்பு சம்பளம் மற்றும் நிலுவை தொகை களை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று ஐஓசி ஆலை முன்பு தமிழ்நாட்டு பெட்ரோலியம் கேஸ் ஒர்கர்ஸ் யூனியன் (சிஐடியு) சார்பில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.கே.தியாகராஜன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட தலை வர் பி.பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர் டி. உதயகுமார், மாநில குழு உறுப்பினர் ஆர். வெங்கடபதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க சேலம் மாவட்ட துணை செயலாளர் பி.அரியா கவுண்டர், பெட்ரோலி யம் கேஸ் ஒர்க்கர்ஸ் யூனியன் மாநில உதவி செயலாளர் டி. சேகர் ஆகி யோர் கண்டன உரையாற்றினர். இதில், சிஐடியு மாவட்ட பொருளா ளர் வி. இளங்கோ, மாவட்ட குழு உறுப்பினர் குமரன் உள்ளிட்ட திர ளானோர் கலந்து கொண்டனர்.