அவிநாசி, அக். 18- அவிநாசியில் சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் போனஸ் பேரவை கூட்டம் வியாழனன்று நடை பெற்றது. அவிநாசி விசைத்தறி தொழிற் கூடங்கள் நிறைந்த பகுதியாகும். இத்தொழிலில் ஏராளமான தொழி லாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் விசைத்தறி தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டை விட கூடுதலாக போனஸ் வழங்க வேண்டும் என சிஐடியு சார்பில் விசைத்தறி உரிமை யாளர் சங்கத்திடம் கடிதம் கொடுக் கப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை இல்லாததால் அடுத்த கட்ட நட வடிக்கை குறித்து ஆலோசனைக் கூட்டம் வியாழனன்று நடைபெற் றது. இக்கூட்டத்திற்கு விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய தலைவர் கே.முருகன் தலைமை வகித்தார். இதில் சங்கத்தின் மாநில தலைவர் பி.முத்துசாமி, மாவட்ட துணை தலைவர் வி.மோகனசுந்தரம், ஒன்றிய செயலாளர் ஆர்.பழனிசாமி, ஒன்றிய பொருளாளர் என்.கருப்பு சாமி உட்பட பலர் கலந்து கொண்ட னர். கூட்டத்தில் வரும் திங்களன்று அனைத்து தொழிலாளர் சங்கங்க ளுடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.