அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள சைலென்சர் உற்பத்தி செய்யும் நெல்சன் குளோபல் ப்ராடக்ட்ஸ் ஆலையில் சிஐடியு சங்கம் உதயமானது. சங்கத்தின் பொருளாளர் பி.முரளிகிருஷ்ணன் சிஐடியு கொடி ஏற்றினார். வடசென்னை மாவட்டக் குழு உறுப்பினர் அறிவுடை நம்பி பெயர் பலகையை திறந்து வைத்தார். இதில் சங்கத்தின் பொதுச் செயலாளர் சு.லெனின் சுந்தர், கிளைத் தலைவர் சதிஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.