tamilnadu

img

அவிநாசி அருகே இந்து முன்னணியினரால் கிறித்தவர்களின் பிரார்த்தனை தடுத்து நிறுத்தம்

அவிநாசி, செப்.15- அவிநாசி அருகே இந்து முன் னணியினரால் கிறித்தவர்களின் பிரார்த்தனை கூட்டம் தடுத்து நிறுத்தப்பட்டது. அவிநாசி ஒன்றியம், புதுப்பா ளையம் ஊராட்சிக்குட்பட்ட கருணை பாளையம் பகுதியில் எல்லோஹிம் அசெம்பளி கிறித் தவ மதத்தினர் ஞாயிறன்று பிரார்த்தனை செய்து கொண்டி ருந்தனர். அப்போது அங்கு இந்து முன்னணியினர் திடீரென  உள்ளே புகுந்து பிரார்த்தனை யைத் தடுத்து நிறுத்தச் செய்தனர். பாரத் மாதாவுக்கு ஜே என  கோஷம் இட்டனர். வெளியே வா, கற்களை எறிவோம் என மிரட்டத் தொடங்கினார். பெண்களுடன் வெளியே வந்து பார்க்கும் போது காவல்துறையி னர் நின்று கொண்டிருந்தனர். எங்களை திருமுருகன்பூண்டி காவல் நிலையத்திற்கு வரும்படி அழைத்தனர். அப்பொழுது  காவல் துறை முன்னிலையில் இந்து முன் னணியினர்  பெண்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.  மேலும் கட்டிடத்தின் முகப்பு முன்பு செல்பி எடுத்துக் கொண்டு பாரத் மாதா கி ஜே என முழுக்க மிட்டனர்.  இது குறித்து எல்லோஹிம் அசெம்பளி டிரஸ்ட் நிர்வாகி ஜெகன் கூறுகையில், எல்லோ ஹிம் அசெம்பளியில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் வாரந் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கருணைபாளையம் பகுதியில் உள்ள 25 குடும்பத்தினர் பிரார்த் தனை  செய்து கொண்டு வருகி றோம். இதனை காவல் துறையி னர் துணையுடன் இந்து முன்ன ணியினர் தடுத்து நிறுத்தியுள் ளனர் என்றார்.