கரூர் மாவட்டம் புகழுரிலுள்ள தமிழ்நாடு செய்தித் தாள் காதித ஆலையின் உற்பத்திக்கு தேவையான சவுக்கு கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கற்பட்டு, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில்தான் அதி கம் விளைவிக்கப்படுகிறது. இங்கிருந்து லாரிகள் மூலம் எடுத்துச் செல்ல அதிக செலவாகிறது. எனவே, இந்த ஐந்து மாவட்டங்களுக்கு மையமான பகுதியில் அரசு சார்பில் ஒரு டெப்போ அமைத்து கொடுத்து விவசாயிகளி டம் நேரடியாக கொள்முதல் செய்து ஒட்டுமொத்தமாக புகழூருக்கு அனுப்பி வைக்க முடியும். இது விவசாயி களுக்கும் பயனுள்ளதாக அமையும், இதன் மூலம் சவுக்கு பயிர் சாகுபடியும் அதிகரிக்கும் என்று திமுக உறுப்பினர் எ.வ.வேலு கூறினார். இதற்கு விளக்கம் அளித்த அமைச்சர் எம்.சி. சம்பத், “கரூர் காகித ஆலையின் உற்பத்தி, விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு புள்ளி விவரங்களுடன் தற்போது காகித கூழ் தயாரிப்பு ஆலைக்கு அடிக்கல் நாட்டப்பட்ட தையும், அதற்காக பின்லாந்து நாட்டில் இருந்து எந்தி ரங்கள் இறக்குமதி செய்ய உள்ளதையும் விரிவாக கூறி னார். சவுக்கு கொள்முதலுக்காக டெப்போ அமைக்க வேண்டியது அவசியமானதுதான் என்றும் முதலமைச்ச ரின் கவனத்துக்கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.