ஈரோடு, ஜூன் 12- ஈரோடு மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் புதனன்று உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாளை முன்னிட்டு விழிப்புணர்வு புகைப்பட கண் காட்சி நடைபெற்றது. இது குறித்து ஈரோடு மாவட்ட அரசு அருங்காட்சி யக பொறுப்பாளர் பா.ஜென்சி கூறுகையில், குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும் என்பதற் காக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இதன்ஒருபகுதியாக, இங்கு அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சி யில் குழந்தை தொழிலாளர் சட்டம் மற்றும் ஒழுங்கு முறை சட்டம், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டங்கள், குழந்தைகள் இளம் நீதி மற்றும் பாதுகாப்பு சட்டம் போன்றவைகள் பற்றிய கருத்து ஓவியங்களாகவும், புகைப்படங்களாகவும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பின ரும் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். மேலும், 6 வயது முதல் 14 வயது வரை கட்டாயம் குழந்தைகளை கல்வி கற்க செய்ய வேண்டும் என்பது சட்டம். இந்த சட்டத்தை முழுமையாக அம லாக்க பொதுமக்களும், அரசு நிர்வாகமும் தொடர்ந்து முயற்சி எடுக்க வேண்டும். அவ்வாறு தொடரும் பட்சத்தில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க முடியும். குழந்தைகளுக்கு நல்ல கல்வி அளிக்கப் பட்டால் சமுதாய மாற்றம் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.